சுற்றுச்சூழல்

ஸ்பெயின்: கடற்காயலில் தொடர்ந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கும் மீன்கள்!

EllusamyKarthik

ஸ்பெயின் நாட்டில் இறந்த நிலையில் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகின்றன மீன்கள். இதுவரை ஐந்து டன் மீன்கள் இறந்த நிலையில் ஒதுங்கியுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த அவலம் தென் கிழக்கு ஸ்பெயினில் உள்ள கடற்காயலில் (Lagoon) இந்த அவலம் அரங்கேறி வருகிறது.

உள்ளூர் பண்ணையாளர்கள் நீர் நிலைகளில் ஏற்படுத்தி வரும் மாசு தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். மறுபக்கம் அந்த நாட்டு அரசு, அதிகரித்து வரும் வெப்பமே இதற்கு காரணம் என சொல்லி வருகிறது. கடந்த திங்கள் வரை அந்த பகுதியில் 5 டன் மீன்கள் இறந்துள்ளன.