சுற்றுச்சூழல்

மருத்துவமனை செல்லாமலே புற்றுநோயை கண்டுபிடிக்கும் கருவி

மருத்துவமனை செல்லாமலே புற்றுநோயை கண்டுபிடிக்கும் கருவி

webteam

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் நிம்மி ராமானுஜம் கருப்பை புற்று நோயை கண்டறியும் சாதனத்தை உருவாக்கியுள்ளார். 

அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் நிம்மி ராமானுஜம் மற்றும் ஒரு குழுவினர் கருப்பை புற்றுநோயை கண்டறியும் சோதனை மேற்கொண்டு, பாக்கெட் சொல்போஸ்கோப் என்ற கருவியை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கிய இந்த கருவியின் மூலம், மருத்துவமனை செல்லாமலே பெண்கள் தானாகவே வலி ஏதுமின்றி நோயை கண்டுபிடிக்கலாம் என்றும், இந்த கருவியின் மூலம் 80 சதவீதம் சரியாக நோயை கண்டறிய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.