சுற்றுச்சூழல்

ஆபத்து இல்லாத பகுதிகளிலேயே யானைகள் படுத்து உறங்கும் - ஓசை காளிதாஸ்

JustinDurai

சீனாவில் வலசை மாறிய யானைகள் நீண்டதொரு பயணக் களைப்பில் நிம்மதியாக படுத்து ஓய்வெடுக்கும் காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், 'அயர்ந்து உறங்குவது யானைகளின் இயல்புதான்' என்று தெரிவிக்கிறார் இயற்கை ஆர்வலர் 'ஓசை' காளிதாஸ்.

புலி, சிங்கம் உள்ளிட்ட வேட்டை விலங்குகள் இல்லாத பகுதிகளில் யானைகள் படுத்து உறங்கும் என்றும், மற்ற இடங்களில் நின்றபடியே உறங்கும் என்றும் 'புதிய தலைமுறை'க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் விளக்கியிருக்கிறார்.