சுற்றுச்சூழல்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட கோவை குற்றாலம்

kaleelrahman

தொடர்மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட வனத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் மழை குறைந்து தற்போது கோவை குற்றாலத்தில் வழக்கமான அளவு நீர்வரத்து இருப்பதால் மீண்டும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் கோவை குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது, மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வழக்கமான வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அங்கு குவிந்து வருகின்றனர்.