சுற்றுச்சூழல்

உழைத்தால் சர்க்கரையைத் தவிர்க்கலாம்

webteam

சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக தென்மாநிலங்கள் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மாறிவரும் உணவுப்பழக்கங்களும் வாழ்வியல் முறை மாற்றங்களும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துவருகின்றன. உண்ணும் உணவுக்கேற்ற உழைப்பு இல்லாததும் உடல் எடை அதிகரிப்பும் சர்க்கரை நோய்க்கான காரணங்களில் ஒன்று என மருத்துவர்கள் கூறுகின்றனர். இனிப்பு கூடிய பொருட்களை உண்பது, வறுத்த, பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்புகள் அதிகமாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.