சுற்றுச்சூழல்

உத்தரப் பிரதேசம்: மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழப்பு

EllusamyKarthik

உத்தரப்பிரதேச மாநிலம் ஷரன்பூர் பகுதியில் உள்ள ஷிவாலிக் வனப்பகுதியில் யானை ஒன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள மோகந்த் சரக வானத்தில் நடந்துள்ளது. அதிக வோல்டேஜ் திறன் கொண்ட ஹை டென்ஷன் லைன் (HT) தாழ்வாக சென்றுள்ளது. அதனால் யானை அதனை உரச மின்சாரம் பாய்ந்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் அந்த இடத்தில் குவிந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.