கல்வி

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு!

webteam

மே 31-ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மே 31ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து யூபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மீண்டும் எப்போது நடைபெறும் என மே 20-ம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.