கல்வி

உதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு!

webteam

தமிழக அரசின் கீழ் செயல்படும் அரசுக் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் பற்றிய திருத்தப்பட்ட புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வாணையம். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
உதவிப் பேராசிரியர்

மொத்த காலியிடங்கள் = 2,331

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 04.10.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 04.10.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2019, மாலை 05.00 மணி வரை

வயது வரம்பு:
01.07.2019 அன்றுக்குள், 57 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.57,700 முதல் அதிகபட்சமாக ரூ.1,82,400 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.300
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600

குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, NET / SLET / SET / SLST / CSIR / JRF போன்ற ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

(அல்லது)

அதிகபட்ச கல்வித்தகுதியாக, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் அத்துடன் பிஎச்.டி (Ph.D) பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://trb.tn.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்கள் சான்றிதழ்களை முதன்முறையாக விண்ணப்பிக்கும் போதே இணைய வழியாக பதிவேற்றம் செய்யும் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://trb.tn.nic.in/arts_2019/NotificationNEW.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.