கல்வி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒலிக்கும் திருக்குறள்

Veeramani

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் திருக்குறள் ஒலிக்கும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் 10 திருக்குறள்கள் அவற்றின் பொருளுடன் ஒலிக்கின்றன. திருக்குறளை ஒலிக்கும் நடைமுறை 1995ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வோர் உள்ளிட்டோர் திருக்குறளை தெரிந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.