கல்வி

அண்ணா பல்கலைக் கழகத்தில் ரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும்: உயர் நீதிமன்றம்

webteam

அண்ணா பல்கலைக் கழகத்தில் ரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் இறுதி பருவ தேர்வுகள் தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ரத்தான தேர்வுகளுக்கு கட்டணத்தை செலுத்துமாறு அண்ணா பல்கலை உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது. கட்டணத்தை செலுத்தாதவர்கள் 4 வாரத்திற்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் திருப்பித்தர தேவையில்லை எனவும் தேர்வு வசூலிப்பது குறித்த அண்ணா பல்கலை பதிவாளரின் உத்தரவு செல்லும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.