கல்வி

ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் - 2 தேர்வுக்கான தேதி அறிவிப்பு

webteam

ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள்- 2 தேர்வு ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 1 தேர்வு நடந்து முடிந்து அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 2 தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு கூட அனுமதி சீட்டு ஆகியவை பின்னர் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 2 தேர்வு கணினி வழியாக நடைபெற உள்ளதால் இந்த தேர்வுக்கான மாதிரி தேர்வு எழுதி பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.