நடப்பு கல்வியாண்டில் Professional English பாடத்தை கட்டாயமாக நடத்த மாநில உயர்க்கல்வி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்புடைய செய்தி: ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை கேரள முதல்வரிடம் நேரில் வழங்கினார் டி.கே.எஸ். இளங்கோவன்
இந்த உத்தரவு அண்ணா பல்கலைக்கழகம், சட்டப்பல்கலைக்கழகம், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு பிறப்பிக்கப்ப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை ஏற்று கடந்த ஆண்டே பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்பட 11 பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் கடந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்தை தொடர்ந்து நடத்த மாநில உயர்கல்வி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.