கல்வி

பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைக்க இரண்டாம் கட்ட நிதி விடுவிப்பு

Veeramani

பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைப்பதற்காக இரண்டாம் கட்ட நிதியையும் பள்ளிக்கல்வித்துறை விடுவித்துள்ளது.

ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.3.73 கோடி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், 2-ம் கட்டமாக ரூ.3.73 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உருவாக்குதல், "மாணவர் மனசு" என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டி அமைத்தல் போன்றவற்றுக்கான 37,386 பள்ளிகளுக்கு தலா ரூ.2,000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

வரும் 31-ம் தேதிக்குள் "மாணவர் மனசு" பெட்டி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு முன்னிலையில் திறந்து, புகார்களுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.