கல்வி

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்!

webteam

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது. 

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. 23 ஆம் தேதி வரை நடக்கும் இந்த செய்முறை தேர்வை 1.5 லட்சம் பிளஸ் 2 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், உயிரி தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு செய்முறை தேர்வு நடக்கிறது.

முன்னதாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக  சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு ரத்துசெய்யப்பட்டது. அதே போல 12 ஆம் வகுப்பு பொதுதேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.