கல்வி

சத்துணவில் தரமற்ற முட்டைகள் வழங்கப்படவில்லை: தமிழக அரசு

Veeramani

சத்துணவில் தரமற்ற முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முட்டைகளை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே வேக வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் உடைந்த அல்லது புழுக்கள் இருந்த முட்டைகளை விநியோகஸ்தர்களிடம் இருந்து மாற்றி பெறுவதற்காக தனியாக வைக்கப்பட்டுள்ளதை புகைப்படம் வெளியிடுவதாகவும், எந்த ஒரு சத்துணவிலும் தரமற்ற முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.