கல்வி

நீட் வகுப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வு - தமிழக அரசு தேதி அறிவிப்பு

webteam

தமிழக அரசு அளிக்கும் சிறப்பு நீட், ஜெ.இ.இ பயிற்சிகளில் சேர்வதற்கான தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுவது போன்று இந்தாண்டும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் தகுதித் தேர்வின் அடிப்படையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வாகும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறுந்தேர்வுகள் நடத்த வினாத்தாட்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. 

அவரவர் பள்ளிகளிலேயே இந்தக் குறுந்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. போட்டித் தேர்வுகளில் அதிக மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தத் தொடர் குறுந்தேர்வுகள் நடத்தப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது.