கல்வி

நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு: மத்திய அமைச்சர் அறிவிப்பு

webteam

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகக் கருதப்படும் நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவு தேதியை ட்விட்டரில் வெளியிட்ட அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், "நீட் தேர்வு முடிவுகளை தேசிய முகமை அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடும். தேர்வு முடிவு வெளியாகும் சரியான நேரம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் " எனப் பதவிட்டுள்ளார்.

இதனிடையே, கொரோனா பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக நீட் தேர்வை எழுதத் தவறிய மாணவர்களுக்கு அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.