கல்வி

'புதிய சான்றிதழை பெறுவதற்கான கட்டணம் உயர்வு' - அண்ணா பல்கலைக்கழகம்

Veeramani

கிரேடு மற்றும் மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால், புதிய சான்றிதழை பெறுவதற்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 10மடங்கு உயர்த்தியுள்ளது.

அதன்படி, கிரேடு மற்றும் மதிப்பெண் சான்றிதழுக்கு 300ரூபாயில் இருந்து மூவாயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று, பட்டப்படிப்புக்கான புதிய சான்றிதழை பெறுவதற்கு மூவாயிரத்தில் இருந்து 5ஆயிரம் ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் 10ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதே போன்று, 23 வகையான சான்றிதழ்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி முதல், கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.