கல்வி

நாளை தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு

நாளை தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு

Rasus

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது. 583 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, ஜூலை 21-ம் தேதி விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை.23-ம் தேதி தொடங்குகிறது.

கலந்தாய்வு தொடர்பான தகவல்களை www.tnea.ac.in என்ற வலைத்தளத்தில் அறியலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.