கல்வி

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்த கல்லூரிக் கல்வி இயக்ககம்

நிவேதா ஜெகராஜா

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 163 கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்தள்ளனர். இந்நிலையில், கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், கலந்தாய்வு ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.