கல்வி

இன்று முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

EllusamyKarthik

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

முதல்நாள், சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த கலந்தாய்வுகள் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருக்கிறது. 30ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்குகிறது.