கல்வி

என்.சி.சி மாணவர்களுக்கு தனியாக தேர்வுகளை நடத்துக - கல்வி நிறுவனங்களிடம் யுஜிசி கோரிக்கை

Veeramani

என்.சி.சி மாணவர்களுக்கு தனியாக தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

குடியரசு தின விழாவிற்கான அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக என்சிசி மாணவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பயிற்சியில் ஈடுபடுவதால் தேர்வுகளில் கலந்து கொள்வதில் சிரமம் உள்ளது. இதன் காரணமாக தேர்வுகளில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் அல்லது இவர்களுக்கான தனி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என யுஜிசி கோரிக்கை வைத்துள்ளது.

தன்னலமில்லாத நாட்டின் சேவையில் ஈடுபட கூடிய மாணவர்களுக்கு இந்த உதவிகளை செய்து தர வேண்டும் எனவும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.