கல்வி

'என்னைக் கவர்ந்தான்'- சிறுவனை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Veeramani

வள்ளுவர் கோட்டத்தை வரைந்த சிறுவன், அதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து பாராட்டு பெற்றார்

இது தொடர்பான தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், " கருணாநிதி அமைத்த வள்ளுவர் கோட்டத்தை வரைந்த மழலை, தமிழ் எழுத்துகள் உள்ள சட்டையோடு, தமிழ்வாழ்க எனக் காட்டி என்னைக் கவர்ந்தான். வளர்க அவர் திறமை என வாழ்த்துகிறேன்.

குழந்தைக்குத் தமிழுணர்வை ஊட்டி வளர்க்கும் உங்கள் குடும்பத்தையும் வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்