கல்வி

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பருவத் தேர்வுகள் அறிவிப்பு

கலிலுல்லா

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மணவர்களுக்கு வரும் நவம்பர் 30 ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதியும் தொடங்கும்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இவ்வாண்டு இரு பருவத் தேர்வு முறையை சிபிஎஸ்இ நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. சரியான விடையை தேர்ந்தெடுக்கும் அப்ஜெக்டிவ் டைப் முறையில் தேர்வு நடைபெறும் எனவும் ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடம் நடத்தப்படும்.

குளிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு காலை 11:30 மணிக்கு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வுக்கு பிறகு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பருவத் தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது