கல்வி

மின்வாரிய உதவி பொறியாளர் பணிகளுக்கான கணினி மொழித்தேர்வு ஒத்திவைப்பு!

webteam

மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கணினிவழித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 24 முதல் மே 16 வரை நடைபெற இருந்த கணினி வழித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in  என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.