கல்வி

காஷ்மீர்: குழந்தைகளுக்காக பேருந்து நிலையத்தை தெருவோர நூலகமாக மாற்றியமைத்த ராணுவம்!

EllusamyKarthik

காஷ்மீரின் தெற்கு பகுதியில் சிதிலமடைந்த பேருந்து நிலையத்தை குழந்தைகளுக்காக நூலகமாக மாற்றி அமைத்துள்ளனர் ராணுவத்தினர். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிகிறது. 

இந்த நூலகத்தில் அப்துல் கலாமின் கனவு இந்தியா குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நூலகத்திற்கான புத்தகங்களை இந்திய புத்தக சொசைட்டி சில புத்தகங்களை ஸ்பான்சர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.