கல்வி

11-ஆம் வகுப்பில் குரூப் தேர்வு செய்யும் விவகாரம்: அதிரடி உத்தரவிட்ட பள்ளிக் கல்வித்துறை

webteam

அரசுப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவுகளை ஒதுக்கிட வேண்டும் என்றும், பரிந்துரை அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பட்டியலின மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருப்பினும், இட ஒதுக்கீட்டை பின்பற்றி பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித புகாருக்கும் இடம் தராமல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது