கல்வி

ஆக.23 முதல் தற்காலிக 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: தமிழக அரசு

Sinekadhara

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதிமுதல் பதிவிறக்கம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் அனைவருக்கும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மதிப்பெண் கணக்கீடு முறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது www.dge.tn.gov.in-இல் பிறந்த தேதி, பதிவு எண்ணை பதிவிட்டு10ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 23 முதல் 31 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.