கல்வி

10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

Veeramani

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் வினாத்தாள்கள் கசிந்தது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள விளக்கத்தில், " பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தவே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது, அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

கட்டாயமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெறும். அது பாதுகாப்பான முறையில் நடத்தப்படும். எனவே, திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது