குற்றம்

யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜூலை 3 ஆம் தேதி வரை சிறை: நீதிமன்றம் உத்தரவு

Veeramani

பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டுள்ளார்.

பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதிவரை பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடும் போது சிறுவர், சிறுமியர்களிடம் ஆபாசமாக பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த மதன் நேற்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கிருத்திகாவும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.