குற்றம்

பெண்களின் குழாயடி சண்டையில் இளைஞர் கொலை

Rasus

காஞ்சிபுரம் மாவ‌ட்டம் மாமல்லபுரம் அருகே பெண்களின் குழாயடி சண்டையை தடுத்தவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

மாமல்லபுரம் அடுத்த சூளேரிகாட்டைச் சேர்ந்தவர் செல்வம். அவரது எதிர் வீட்டைச் சேர்ந்த தேவனின் மருமகள் தரணிக்கும், செல்வத்தின் மனைவிக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை செல்வத்தின் மூத்த மகன் மணி தடுக்க முற்பட்டார். அப்போது, தேவன், அவரது மகன் ராமு , மருமகள் தரணி ஆகியோர் தாக்கியதில் மணியின் மார்பில் பலத்த அடி விழுந்தது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணி, வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தேவன், ராமு, தரணி ஆகியோரை கைது செய்தனர்.