குற்றம்

சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றதாக இளைஞர் போக்சோவில் கைது

webteam

திருத்துறைப்பூண்டி அருகே 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் மார்க்ஸ் (25). இவர், எழிலூர் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இது குறித்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளைஞர் அருள் மார்க்ஸ் மீது போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.