குற்றம்

தாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி - பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா

webteam

பொள்ளாச்சி அருகே 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த சித்தப்பாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

‌‌பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாய் இறந்து விட்ட நிலையில், தந்தையும் கைவிட, அம்மாவின் தங்கையான சித்தியின் பராமரிப்பில் அந்த மாணவி இருந்துள்ளார்.

கீதா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம், காதுவலிக்கு சிகிச்சை பெற சித்தி வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, சித்‌தப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிறுமி அலறல் சத்தம் போட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டனர். உடனே அங்கிருந்து சித்தப்பா தப்பிச் சென்றார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் மாணவியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.