குற்றம்

சென்னை: தாறுமாறாக சென்ற தண்ணீர் லாரி மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

Sinekadhara

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று காலை சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது, கட்டுப்பாடின்றி வந்த லாரி மோதியது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள எம்.ஆர்.சி சிக்னல் அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி சிக்னல் மீது மோதி, அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீதும் மோதியது. இதில் பைக்கில் தனது தாத்தாவுடன் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுவன் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். லாரியைக் கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.