குற்றம்

ஆபாசமாக பேசி வருவதாக புகார்: ரவுடி பேபி சூர்யா, அவரது காதலன் கோவையில் கைது

Veeramani

சமூக ஊடகங்களில் ஆபாசமாக பேசி வந்ததாக எழுந்த புகாரில் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரையில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்த தனிப்படை பிரிவு போலீசார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்