செய்தியாளர்: ச.குமரவேல்
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது கடந்த 03.02.2025 அன்று இரவு இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த 5 பேரில் முக்கிய நபரான சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் (38), பரத்ராஜ் (19), விஷால் (19) மற்றும் திலீபன் (27) ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பரிந்துரைத்துள்ளார்.
இதையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.