குற்றம்

வரதட்சணைக்காக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்- உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

JustinDurai

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணைக்காக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரெஹ்ரா பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவர் சுரேந்திராவுடன் வசித்து வந்தவர் மீனா ஜெய்ஸ்வால். 6 மாதக் கர்ப்பிணியான மீனாவிடம் அவரது கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவில் மீனாவிடம் அவரது கணவரும் மாமியாரும் மீண்டும் வரதட்சணை கேட்டு பிரச்சினை செய்துள்ளனர்.  அப்போது மீனாவை அவர்கள் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து வீட்டின் பின்புறம் மீனாவை குழிதோண்டி புதைத்துள்ளனர்.

இந்நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தனது மகளை கொலை செய்துவிட்டதாக உயிரிழந்த மீனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், மீனாவின் கணவர் சுரேந்திரா, அவரது சகோதரி மற்றும் தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மீனாவின் உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதையும் படிக்கலாம்: `இக்குழந்தையின் எதிர்காலமே முக்கியம்’- சிறுமி சுமந்த 28 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி