குற்றம்

சென்னை: பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக மருத்துவர் உள்ளிட்ட 2 பேர் கைது

EllusamyKarthik

சென்னையில் வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக மருத்துவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரம் அடுத்த சி.டி.ஓ. காலனியை சேர்ந்தவர் மருத்துவர் தீபக். இவரது வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண், கடந்த மாதம் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், அப்பெண் வெள்ளிப் பொருட்களை திருடிவிட்டதாக, தாம்பரம் காவல் நிலையத்தில் மருத்துவர் தீபக் புகார் அளித்தார். அதன் பேரில் இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, மருத்துவர் தீபக் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் வேலைக்கு செல்வதை தவிர்த்ததாகக் கூறியுள்ளார்.

சம்பள பாக்கியை வாங்க சென்றபோது, தீபக்கும், அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் என்பவரும் தம்மை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தீபக்கையும் ஆனந்த் அமிர்தராஜையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.