குற்றம்

டாஸ்மாக் அருகே மோதல் ! இருவர் குத்திக் கொலை

jagadeesh

சென்னை பெரும்பாக்கத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட பிரச்னையில் இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளிக்கரணை பெரும்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை அருகே இரு தரப்பினர் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீபன் மற்றும் ஆனந்த் என்ற இருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இருவரும் உயிரிழந்த நிலையில் உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தப்பியோடியவர்கள் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், தப்பியோடியவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.