குற்றம்

திருவாரூர்: காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் 40 ரவுடிகள் கைது

திருவாரூர்: காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் 40 ரவுடிகள் கைது

Veeramani

திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில் 40 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக டிஜிபியின் உத்தரவின் பேரில் கடந்த மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைது செய்யப்பட்டுவரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரடிப் பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றச்செயல்கள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பிரச்சினைக்குரிய ரவுடிகள் என 40 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள், அவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்திருக்கிறார்.