குற்றம்

”மூளைச்சலவைச் செய்து விட்டார்கள்” - இறந்த மனைவியின் உடலை வாங்க மறுத்த கணவன்!

webteam

தற்கொலை செய்து கொண்ட மனைவியின் இறப்பில் சந்தேகம் இருந்ததால், உடலை வாங்க மறுத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போச்சம்பள்ளி அருகில் உள்ள தாதம்பட்டி அப்பாவும் நகரை சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துனர் அருணாச்சலம். இவருக்கும் இவரது உறவினர் மகளான வாசுகி என்பவருக்கும் திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவர் மீது வாசுகி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த வாசுகி, தனது தாயார் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் உடலை நிலையில் போச்சம் பள்ளி காவல்துறையினர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தனது மனைவி இறப்பில் சந்தேகமுள்ளதாகக் குற்றம் சாட்டிய வாசுகியின் கணவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறினார். தகவலறிந்து வந்த பர்கூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தங்கவேலு பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.