குற்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் கைது

webteam

ஆட்டோவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை சோ்ந்த கூலி தொழில் செய்துவரும் தம்பதியரின் 10 வயது மகள் சேலையூரில் இயங்கிவரும் தாம்பரம் நகராட்சி பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் சேலையூரை சேர்ந்த லட்சுமணன் (20) என்ற வாலிபா் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் அழு குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஆட்டோவின் உள்ளே இருந்த சிறுமியை மீட்டனர். அப்போது தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை ஆத்திரமடைந்த பொதுமக்கள் நையப்புடைத்து அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின் சிறுமியின் தந்தை அளித்த புகாரையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் லட்சுமணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.