கோவில்பட்டி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டுராமன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (53) பெயிண்டர் வேலை செய்து வரும் இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ,இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவரது இளைய மகன் முத்துக்குமார் (26). சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர்சுற்றி வந்த இவர், மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு (வெள்ளி) வழக்கம் போல மது அருந்தி விட்டு வந்த முத்துக்குமார், தனது தந்தையிடம் தகராறு செய்ததோடு மது அருந்த பணம் கேட்டுள்ளார். முத்துராஜ் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் வைத்திருந்த அரிவாளால் முத்துராஜை வெட்ட முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட அவர் தன் மகனை கீழே தள்ளி அவர் வைத்திருந்த அறிவாளால் மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்வ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் நாலாட்டின்புத்தூர் போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடி வருகின்றனர்,