குற்றம்

தெலுங்கு திரையுலகை உலுக்கும் போதை பொருள் விவகாரம்

webteam

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு குறித்து தெலுங்கு நடிகர், நடிகைகள் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் நேரில் ஆஜராகில் விளக்கமளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தருண்குமார் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் தொடர்பாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போதைக்கும்பலுடன் தொடர்பு குறித்து பதிலளிக்க திரைத்துறையினருக்கு சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பியிருந்தது. சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து விசாரணைக்கு நடிகர் நடிகைகள் ஆஜராகி வருகின்றனர். பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவின் உறவினராக நடித்திருந்த சுப்பா ராஜிடம் நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், ஒருநாள் முழுவதும் அவரை போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இன்று நடிகர் தருண் குமார் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார். மேலும் போதை பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகத்தின் பேரில் 17 பார்கள் மற்றும் கிளப்புகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.