குற்றம்

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிய அனுமதி

webteam

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், சிபிஐ வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.