குற்றம்

தாயை தாக்கிய ரவுடியை வெட்டிக் கொலை செய்த மகன்... சிவகங்கையில் பயங்கரம்!

webteam

தேவகோட்டை அருகே தாயை தாக்கியவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயல் காவல் நிலைய சரகம் கள்ளிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர் மீது காரைக்குடி, சோமநாதபுரம், தேவகோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த கணேசன் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்ணன் என்பவரின் தாயாரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதனை தட்டிக் கேட்ட கண்ணனையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அங்கிருந்த கோயில் அரிவாளை எடுத்து வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்த ஆறாவயல் காவல் நிலையத்தினர் சம்பவம் இடத்திற்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.