குற்றம்

திருவாரூர்: படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 3.24 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் பறிமுதல்

kaleelrahman

திருத்துறைப்பூண்டி அருகே கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்த கடலோர காவல் படை போலீசார், ஒருவரை கைது செய்தனர் .

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு படகு மூலமாக ஏலக்காய் கடத்தப் படுவதாக முத்துப்பேட்டை கடலோர காவல் படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் நடைபெற்ற அதிரடி சோதனையில் நைனாமுகமது (43) என்பவரை முத்துப்பேட்டை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய படகு மற்றும் 270 கிலோ ஏலக்காய் மூட்டைகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஏலக்காய் மூட்டைகளின் இந்திய மதிப்பு சுமார் 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.