குற்றம்

சேலம்: குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

சேலம்: குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

kaleelrahman

சேலம் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மன்னார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாஸ்கரன் - கல்பனா தம்பதி. இவர்களது மகன் மகளுக்கு திருமணமான நிலையில் பாஸ்கரனும் கல்பனாவும் குடும்ப பிரச்னை காரணமாக ஒரே வீட்டில் இருவரும் தரை தளம் முதல் தளம் என தனித் தனியே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீப காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பாஸ்கரன், காய் வெட்டும் கத்தியால் அவரது மனைவி கல்பனாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்து உயிராலும் போலீசார் பாஸ்கரனை கைது செய்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.