குற்றம்

மளிகை கடையில் திருடு போன தக்காளி பெட்டிகள்.. சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்!

kaleelrahman

சேலம் அருகே மளிகை கடையில் தக்காளியை பெட்டியுடன் திருடிய இளைஞரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் இயங்கிவரும் மளிகை கடையில் இளைஞர் ஒருவர் தக்காளியை பெட்டியுடன் திருடி இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இது தொடர்பாக மளிகைக் கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை கொண்டு இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த மகுடஞ்சாவடி போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இவர், செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தது அம்பலமானது.