குற்றம்

கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் மூலம் ரூ.7 கோடி மோசடி - அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

Sinekadhara

தமிழ்நாடு தொழிலக கூட்டுறவு வங்கியில் சிறு குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகள் வைத்து ரூ.7 கோடி மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கிறார்.

இன்று சட்டப்பேரவையில் பேசியபோது, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 கூட்டுறவு வங்கியில் போலி நகை வைத்து மோசடி என அவர் தெரிவித்தார். இதனால் தற்போது மொத்தம் 45 வங்கிக் கிளைகளில் ஆய்வு நடந்து வருவதாகவும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருக்கிறார்.